F பஞ்சவர்ணேஸ்வரரின் பஞ்சாமிர்தம்: 4.ஸ்தல வரலாறு

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

Monday, 14 January 2013

4.ஸ்தல வரலாறு


4
ஸ்தல வரலாறு

முன்னோர் சமயம் ஆதிசேஷனுக்கும் வாயுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்ததாம். ஆதிசேஷன் யிலை மலையைத் தன் ஆயிரம் மகுடங்களால் இறுகப்பற்றிக் கொள்ளவும், வாயுதேவன் மலையை அசைக்க சண்ட மாருதமாக  வீசினானாம். அந்த சமயம் தேவர்களும் அஞ்சினர். ஆதிசேஷன் தன் பிடியை சற்றே தளர்த்த அந்த தருணத்தில் இரு சிகரங்களை பெயர்ந்து ஒன்று திருநல்லூரிலும், மற்றொன்று பக்கத்தில் இருக்கும் ஆவூரிலும் விழுந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அம்மலைச் சிகரமே திருநல்லூரில் ஸ்வாமி எழுந்தருளிக்கும் மலையாகும். இச்சிகரத்திற்குச் சுந்தர கிரி, தென் கயிலாயம் என பெயர் அப்பொழுதிலிருந்து வழங்கப்படலாயிற்று என்பர். நன்னிலம் கிராமத்தில் உள்ள மதுவனேஸ்வேரர் மாடக்கோயிலும் இவ்வாறு விழுந்த ஒரு குன்றில் கட்டப்பட்டதாக அந்த ஊர் ஸ்தல வரலாறு சொல்கிறது.

ப்தஸ்தான விழா என்று கேள்விபட்டிருப்பாயே.

திருவையாறு ப்தஸ்தான விழாதானே!

ஆமாம் திருவையாறு, அதற்கு அருகாமையில் அமைந்த ஆறு சிவாலயம் அமைந்த ஊர்களான திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டீயூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய ஊர்களில்   திருவையாறு ஸ்வாமி வலம் வரும் விழாவாகும்.

என்ன அந்த ஊர் விசேஷம்? அது என்ன வழக்கம்?

நந்தி பகவான் சுயம்பிரகாசயியை திருமழப்பாடி தலத்தில் திருமணம் செய்து கொண்ட பொழுது  திருவையாற்றிலிருந்து புனித நீரும், திருப்பழனத்திலிருந்து பழவகைகளும், திருவேதிக்குடியிலிருந்து வேத வித்தகர்களும், கண்டீயூரிலிருந்து மகர கண்டிகை போன்ற ஆபரணங்களும், திருநெய்தானத்திலிருந்து நெய்யும் மற்ற பொருட்களும் வந்தனவாம். திருமணம் முடிந்தபிறகு நந்திதேவர் இத்தலங்களுக்கு தன் மனைவியுடன் திருவுலா சென்று வந்தாராம். அதன் பொருட்டுத்தான் இந்த ஏழ் ஊர்த் திருவிழா ( ஸப்த ஸ்தானம்).   
 
அதனை பின்பற்றி பிற்காலத்தில் கஞ்சனூர் சப்தஸ்தான விழா, (திருக்கோடிகா, திருவாலங்காடு, திருவாடுதிறை, தென் குறங்காடுததுறை, திருமங்கலகுடி, திருமாந்துறை, கஞ்சனூர்), கும்பகோண சப்தஸ்தான விழா, (திருக்கலய நல்லூர், தாரசுரம், சுவாமிமலை, திருவலஞ்சுழி, கொட்டையூர், காயாரோகனம், கும்பகோணம்), திருநீலக்குடி சப்தஸ்தான விழா (இனந்துரை, திருநாகேஸ்வரம், திரிபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுரை, மருத்துவக்குடி, திருநீலக்குடி), அய்யம் பேட்டை சப்தஸ்தான விழா (சக்கரமங்கை (திருச்சக்ரபள்ளி), அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை  )   திருவானக்கா சப்தஸ்தான விழா ப்தஸ்தான விழா என்று வழக்கத்தில் வந்தது. அதே அமைப்பில் நல்லூர் ப்தஸ்தான விழாவும் சுமார் 50 – 60 வருடங்களுக்குமுன் வரை நடந்து வந்ததாக சொல்ல நாங்கள் கேட்டிருக்கிறோம். திருநல்லூர் ஆண்டவன் கோலாகலமாக ஊர்வலம் வரும் ஏழ் ஊர்த் திருவிழாஇந்த தலைமுறையினர் காணக் கொடுக்க புண்ணியம் செய்யாதவர்கள்.

நல்லூர் ஸப்தஸ்தானம் எந்த எந்த ஊர்?

ரங்கநாதபுரம், கிளியூர், கோவிந்தகுடி, ஆவூர், (ஏரி, பனந்திடல், மாளிகைத்திடல், மட்டியாந்திடல், பாபநாசம் வழியாக), திருப்பாலத்துரை, உத்தாணி. இங்கு என்ன விசேஷம் என்றால் ஸ்வாமியுடன் அகஸ்த்ய முனிவரும் செல்வார்.

அது என்ன அகஸ்த்ய முனிவர் இங்கு வந்தார்?

இந்த ஸ்தலத்திற்கும் அகஸ்த்திய முனிவருக்கும் ஒரு தொடர்பு உண்டு. முன்பு கயிலை பார்வதி பரமேஸ்வரரின் திருமணத்திற்கு எல்லோரும் வந்திருந்தனர். அதனால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து ஒருவிதமான unbalance ஏற்பட்டது. அதனை சமன் செய்ய அகஸ்திய முனிவரை தென் திசை போய் சமன் செய்ய ஆண்டவன் கட்டளையிட்டான். “நான் திருமண காட்சியை பார்க்கவேண்டாமா” என முனிவர் கேட்டதற்கு “நீ இருக்கும் இடத்தில் காட்சி தருவோம்” என ஆண்டவன் பதில் அளித்தான். அகஸ்த்ய முனிவருக்கு திருமண காட்சி கொடுத்த ஸ்தலம் திருநல்லூர். அதனால் அகஸ்த்ய முனிவருக்கு இங்கு ஒரு சிறப்பு, ஆண்டவன் திருமணத்தை தூரத்தில் இருந்து பார்த்தவராயிற்றே?

“Live telecast in today’s parlance. அப்படித்தானே?” என்று கேட்டாள் நண்பனின் மனைவி.

“In a way you are right” ஆனால் அந்த காலத்தில் நம்முனிவர்கள் தங்கள் தவ வலிமையினால் தூரத்தில் நடக்கும் நிகழ்சிகளை வேறு உபகரணங்கள் இல்லாமலே பார்க்கும் வலிமை பெற்றிருந்தார்கள். சமீப காலத்தில் கூட ஸ்ரீ ரமணர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ( காஞ்சி பெரியவர்), ஸ்ரீ அரவிந்தர் போன்ற தவ முனிவர்கள் இத்தகைய ஆற்றல் பெற்றிருந்தார்கள் என அவர்கள் வரலாற்றை படிக்கும் போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாருங்கள் ஆலயத்திற்குள் போகலாம்.

2 comments:

  1. Comment from Ramdasar

    My Dear Raju

    Congratulatios. Million congratulations.
    Each and Every Nallurians should read this.
    Excellant art work. Clarity in message is good.
    Tamil Language is superb

    Ramadasar.R

    ReplyDelete
  2. Comment form Venkatesh received via e mail

    I wish to place my deep sense of appreciation on the efforts taken to create the blog. I am sure this will go long way for the emerging generations to understand their roots and take pride in them. Let us all join to keep the blog alive.Before I sign off let me also " Wish all of you A HAPPY PONGAL".

    Venkatesh.

    ReplyDelete