F பஞ்சவர்ணேஸ்வரரின் பஞ்சாமிர்தம்: May 2013

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

பார்வதியுடன் கல்யாணசுந்தரர்

Sunday, 19 May 2013

6. ஸ்தலமரம்


ஸ்தல மரம்

ஆலயத்தில் நாம் பிரேவிசித்ததும் நமக்கு கண்களில் தெரிவது ஸ்தல மரம். இங்கு ஸ்தல மரம் வில்வம்.

ஆமாம் நானும் கேள்விபட்டிருக்கிறேன் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல மரம் உண்டு என்று. அது என்ன ஸ்தலமரம் என்ற வினாவை எழுப்பினான் நன்பன்

முன்றைய நாட்களில் மரத்தின் அடியில்தான் முதலில் தெய்வத்தை வழிபட்டனர். பின் கோவில் கட்டி வழிபட்ட போது மரத்தைக் கோவிலில் அமைத்தனர். அதுவே ஸ்தலமரம் எனப் பெயர் பெற்றது.

காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். மாமரத்தின் கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர். பிற்காலத்தில் வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம்- ஒற்றை, ஆம்பரம்- மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பர நாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு ஸ்தலமரமாகும். திருவானைக்காவில் நாவல் மரம் ஸ்தலமரமாகும் நாவல் மரத்தின் கீழிருந்த இறைவனைச்   கோவில் கட்டப்பெற்ற போது நாவல் மரம் ஸ்தல மரம் ஆயிற்று.  சில ஸ்தலங்கள் உதாரணமாக திருக்கள்ளில், திருநெல்லிக்கா, திருப்பனையூர், திருப்பயற்றூர், திருத்தெங்கூர், திருமகல், திருவிரும்பூளை, திருப்புன்கூர், எருக்கத்தம்புலியூர், திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர், திருப்பாசூர், கச்சிநெறிகாரைகாடு, திருவாலங்காடு, திருமுல்லை வாயில், திருவேற்காடு முதலிய ஸ்தலங்களின் பெயர் மரங்களின்  பெயரிலேயே அமைந்தன.

இதில் ஒன்றை  கவனித்தால் ஒரு உண்மை புரியும். இயற்கைச் சூழலுக்கு ஏற்ற மரங்கள்தான் அந்த இடத்தின் ஸ்தல மரமாக இருக்கும். 
கோவில் மரங்களில் உயர்வு தாழ்வு இல்லை. மாமரமும் உண்டு. எருக்கிலை, கொட்டைச் செடி முதலியவைகளும் ஸ்தல மரமாகவும் இருக்கின்றன. அப்பகுதி மக்களால் எளிதில் வளர்க்கக் கூடிய, வளரக் கூடிய மரங்களே ஸ்தல மரங்களாயின. மக்களுக்கும், கால் நடைகளுக்கும் நிழல் தரும் மரங்கள் இறைவனுக்கும் மரமாயிற்று.  இயற்கையும் கடவுளையும் ஒன்று படுத்தி மரம் செடி கொடிகள் அழியக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனை கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.
பண்டைய நாளில் ஆகம சாஸ்த்திர முறையில் கட்டப்பட்ட கோயில் களெல்லாம், இன்று நாம் வெற்று நிலத்தில் கட்டுகிற கோயில்களைப் போன்று கட்டப்பட்டவை அல்ல என்று தொடர்ந்தாள் என் மனைவி. இடத்தின் விசேஷம், தீர்த்தத்தின் சிறப்பு, ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்த இடம், யாராவது சித்தி பெற்று கடவுள் அருள் பெற்ற இடம், யாருக்காவது இறைவன் காட்சி தந்த இடம், தேவர், முனிவர், ரிஷிகள் போன்றோர் தவஞ் செய்த இடம் இப்படி ஏதாவது ஒரு முறையில் சிறப்பு பெற்ற இடத்தில்தான் கட்டப்பட்டன.

ஸ்தலத்குரிய மரம் ஸ்தல மரம் அவ்வளவுதானே! என்றாள் நண்பனின் துணவியார்.

பண்டை நாளில், மகரிஷிகள் முதலியோர் மரங்களின் அடியில்தான் தவம்/தியானம் செய்தனர். எந்தெந்த மரங்களின் அடியில் தவஞ்செய்தால் எந்தெந்த அளவுக்குப் பலன் சித்திக்கும்; எந்தெந்த மரங்களின் அடியிலிருந்து எந்தெந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும், எந்தெந்த தேவதைகளைத் தியானிக்கவேண்டும் என்றெல்லாம் நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. ‘அந்தந்த முறைகளில், எந்தெந்த தலத்தில் யார் யார் எவ்வகையான மரத்தின் கீழிருந்து தவம்/தியானம் செய்தார்களோ அந்த மரங்களெல்லாம் ஸ்தல மரங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன’ என்று தொடர்ந்தாள் மனைவி. ஸ்தல விருஷ்ஷத்தை சுற்றினால் கர்பக கிரகத்ததை சுற்றின பலன் உண்டு என்று சொல்வார்கள். உத்திரகோச மங்கை என்று தூத்துக்குடி - ராமநாதபுரம் மாவட்டங்கள் இணையும் இடத்தில் ஒரு கோயில் உள்ளது. அங்குள்ள இலந்தை மரம், மிகப் பழமையான மரம் அது. அங்கு காவப்புலிகண்டர், சிவனை நினைத்து தவம் புரிந்து சிவனை தரிசித்து அவரிடம் வரம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே பல கோயில்களில் ஸ்தல விருட்சத்திற்கு அருகே சித்தர் பீடம் அமைக்கப்பட்டிருக்கும். சித்தர்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். அவர்களது தவத்தின் வலிமையால் கோயிலின் வலிமை கூடும். அவர்கள் தவம் செய்வதே இந்த ஸ்தல விருட்சத்தின் கீழ்தான்.  உதாரணமாக விருதாச்சலம் கோயிலில் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தல விருட்சம் வன்னி மரம், கோயிலின் விஸ்வஜித் முனிவர் உட்கார்ந்திருப்பார். அவரை வணங்கினாலே போதும். அதாவது ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்ற நேசன் எதிர் நிற்றல் அறிது என்ற பாடல் உண்டு. அதாவது ஈசனையே எதிர்க்கலாம். ஈசனிடம் இருந்து வரம் பெற்று அருள் பாலிக்கும் சித்தர்களை எதிர்க்கக் கூடாது என்பது பொருள். என ஒரு வியாக்கியானமே நடந்தது அவ்விடத்தில். ‘ குரு, தெய்வம் இருவரும் ஒரே நேரத்தில் நேரே வந்தால் குருவைத்தான் வணங்ககவேண்டும்: ஏனெனில் கடவுளை காட்டிக்கொடுத்தவர் அந்த குருதானே’ என்று ஒரு பாட்டு ஹிந்தியில் உண்டு.
ஸ்தல விருட்சங்கள் என்பது இறைவனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருவோமே அதை விட அதிக சக்தி வாய்ந்தது ஸ்தல விருட்சமாகும். ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒரு முறை வந்தாலும் போதுமானதுதான். யார் வேண்டுமானாலும் வலம் வரலாம். எப்ப்பொழுது வேண்டுமானலும் வலம் வரலாம்

அந்த வகையில் இவ்வூரின் ஸ்தல மரம் வில்வம்.